இனவழிப்புப் போரே நெருக்கடிக்குக் காரணம்! – ஏற்றுக்கொண்டார் வசந்த முதலிகே.

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களால், ‘கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை? இப்போது நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரே குரல் கொடுக்கின்றீர்கள்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வசந்த முதலிகே பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.