யாழ். நகை வியாபாரியும், உதவியாளரான யுவதியும் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரபல நகைக்கடைகளை நடத்தி வரும் வர்த்தகர் ஒருவரும், அதே கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரும் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியொருவர் இந்த நகைக்கடையில் பணி செய்து வந்த நிலையில், அவர் நாவாந்துறை பகுதியில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்துக்குச் சென்று வருந்தியதோடு , இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி – நாவலர் தெருவில் உள்ள நகைக்கடை உரிமையாளரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலதிபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இவர் 48 வயதுடைய வர்த்தகர் எனவும், அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை,

ஆனால் யுவதி தொங்கி இறந்ததை அடுத்து, யுவதியின் உறவினர்கள் சிலர் , யுவதியின் மரணத்துக்கு தொழிலதிபரே காரணம் என , அவரை தாக்க முயன்றதாக நாவாந்துறை கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.