மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலயத்திற்கு ஒரு பாடசாலை என்ற நிகழ்வின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயற்பாட்டின் அங்கமாக முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்றைய தினம் (23) காலை 9.30 மணியளவில் மாணவர்களுக்கான இலவச சீருடை , இலவச பாடநூல்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடநூல்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சா.பிரதிவாணன், பாடசாலை அதிபர் திரு.கோகுலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.