நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்..

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த ஆண்டு யாஷிகா ஓட்டி சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.இதையடுத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றம் இந்த வழக்கில் யாஷிகாவை ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால் இதற்கு யாஷிகா ஆஜராகாத நிலையில் தற்போது அவர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.