முற்றாக துண்டிக்கப்பட்ட கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது (உள்ளே சத்திர சிகிச்சை வீடியோ – அவதானம்)

21 வயதுடைய யுவதியொருவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கை , 4 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் கேகாலை பொது வைத்தியசாலை வைத்தியர்களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த யுவதி பொல்கஹவெல பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவராவார். கேகாலை எரபதுபிட்டிய எனும் கிராமத்தை சேர்ந்தவராவார்.

நேற்று (04) இரவு 7.30 மணியளவில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டைக்கு சிக்கிய போது வாள்வெட்டுக்கு இலக்காகி அவரது இடது கை துண்டாகி தனயாகி போயுள்ளது.

வெட்டுக்குள்ளான யுவதியின் வெட்டுப்பட்ட கையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 15 நிமிடங்களுக்குள் , கை துண்டிக்கப்பட்ட நிலையில், அவரை கேகாலை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். துண்டான கையை ஐஸ் கொண்ட பையொன்றுக்குள் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்கள்.

கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அதிக ரத்தப்போக்கு காரணமாக சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ரத்தம் கொடுக்கப்பட்டு ஆபத்தில் இருந்து காப்பாற்றி, கையில் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டார்.

சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ஜெயவர்தன ;

“இதுபோன்ற அவசரநிலையில் கருத்தில் கொள்ள இரண்டு விஷயங்கள் உள்ளன. முதல் விடயம், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது . இரண்டாவது விடயம், நோயாளியின் உறுப்பையும் காப்பாற்றுவது.

இந்தப் பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்தோடியதால் , உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இந்த நிலையை நாங்கள் சரி செய்தோம். இரத்தம் கொடுத்து அவள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றினோம்.

இரண்டாவது விடயம், துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தும் சவால். இந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் இணைக்க முடிந்தது.

இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 4 மணி நேரம் ஆனது. உதவி மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர், செவிலியர்கள், சுகாதார உதவிக் குழுக்கள் மற்றும் இரத்த வங்கியின் சிறப்பு ஆதரவுடன் , இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அவளது உயிரையும் கையையும் காப்பாற்ற முடிந்தது. ”

குறித்த யுவதி தற்போது கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எச்சரிக்கை :
வீடியோக்கள் பார்க்க கடினமாக இருக்கும். மனம் இளகியோர் பார்ப்பதை தவிர்க்கவும்.



Leave A Reply

Your email address will not be published.