இலங்கை கரப்பந்து நடுவர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக என்.சுதேஷ்குமார் தெரிவு

இலங்கை கரப்பந்து நடுவர்கள் சங்கத்தின் அலுவலர்களின் தேர்தல் (06/09/2020) நேற்று ஞாயிற்றுக் கிழமை மகாரகம தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில் உட்புற மைதானத்தில் நடைபெற்றது.

இதில் செயற்குழுஉறுப்பினர்களாக 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 13 பேரில்ஒருவராக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழரான என்.சுதேஷ்குமார் தெரிவு செய்யப்பட்டுுள்ளார்.

2015 ஆண்டு சர்வதேச கரப்பந்தாட்ட பரீட்சையினை அல்ஜீரியா நாட்டில் முடித்துள்ள இவர்.2017 ஆண்டு ஈரான் நாட்டில் நடைபெற்ற22வயதுபிரிவினருக்கனா ஆசிய கரபந்தாட்ட போட்டி, மற்றும் 2018 ஆம் ஈரான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான 12 ஆவது ஆசிய நாடுகளுக்கு இடையிலான கரபந்தாட்டப் போட்டிகளுக்கு மத்தியஸ்தராக..கடமையற்றியுள்ளார். மற்றும் யாழ்.மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் உப தலைவராகவும், வட மாகாண கரப்பத்தாட்ட நடுவர் த்தின் தலைவராகவும் கடமையற்றி வருகிறார்.இவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த துடுப்பட்ட நடுவர் என்பது. குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.