ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா.

சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். லீக் சுற்று போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். 5 பந்துகள் மட்டும் சந்தித்த அவர் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் கேட்சாகி அவுட்டானார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார்.

அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த வரிசையில் சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14), ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே (தலா 13 முறை), கவுதம் கம்பீர் (12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், வார்னர், கோலி ஆகியோர் (தலா 10) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.