யாழ். வல்வெட்டித்துறை பலூன் தீப்பிடித்து வீழ்ந்ததில் வீடு நாசம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலில் பூஜையின் போது பறக்கவிடப்பட்ட பலூன் தீப்பிடித்து வீடொன்றின் மீது விழுந்ததில், அந்த வீடு நேற்று (06) தீயினால் எரிந்து நாசமானது.

பலூன் வானில் செலுத்தப்பட்ட சுமார் முப்பது நிமிடங்களின் பின்னர் , யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் தீப்பிடித்து விழுந்தது.

பலூன் அனுப்பப்பட்ட நேரத்தில் கோவிலுக்குள் சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் இருந்ததால் பலூன் விழுந்ததை பார்த்து அப்பகுதிக்கு மக்கள் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் பலூன் விழுந்த வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து வீடு முற்றாக தீயில் எரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.