காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் காடையர்கள்; இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காதாம்!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைக் காடையர்கள் என்று விமர்சித்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“காலிமுகத்திடல் போராட்டக்காரர்களே நாட்டைச் சீரழித்தார்கள். இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எம்மை எவராலும் அழிக்க முடியாது. அழித்தாலும் மீண்டெழுவோம். இதனை இம்முறை மே தினக் கூட்டத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.