கர்நாடகாவில் முந்தும் காங்கிரஸ்… பிரியங்கா காந்தி கோயிலில் சிறப்பு வழிபாடு..!

கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா காந்தி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 74 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையடுத்து கட்சித் தாவலை தடுக்கும் முயற்சியாக முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை பெங்களூருக்கு வருகை தர அழைப்பு கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அவர்களை அழைத்து வர 12 ஹெலிகாப்டர்கள் செல்லவுள்ளன. பெங்களூருவில் ரிசார்ட்டும் தயாராக உள்ளது.

இதனிடையே சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்திலும் ஈடுபட்டார்.

Leave A Reply

Your email address will not be published.