இத்தாலியில் கனமழையால் வீடுகள் சேதம்: 8 பேர் உயிரிழப்பு.

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

எனினும் இந்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.