வங்கித் தலைவர்கள் மீது பிரதமர் கடும் சினம் : தரம் தாழ்ந்த வங்கிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சராக இருப்பதால், அரசு வங்கிகளின் தரமிறக்கத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இது தொடர்பாகதான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் தலைவர்களை கடிந்து கொண்டதாக தெரிய வருகிறது.

இன்று (09) நிதி அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அரசு வங்கிகளின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் 3 வது இடத்தில் இருந்த இலங்கை வங்கி 6 வது இடத்திற்கும், 4 வது இடத்தில் இருந்த மக்கள் வங்கி 7 வது இடத்திற்கும் சரிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.