ஆப்கான் துணை ஜனாதிபதியின் வாகன தொடரணி மீது குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் துணைத் தலைவர் அம்ருல்லா சலேவை குறிவைத்து குண்டு தாக்குதல் ஒன்று இன்று (09) காலை இடம்பெற்றது.

இந்த தாக்குதலில் இருந்து துணை ஜனாதிபதி காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல துணைத் தலைவர்கள் உள்ளனர், அவர்களில் முதன்மையானவர் என அம்ருல்லா சலே துணை ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் ஏற்கனவே மறுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.