குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சிஎஸ்கே.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. லீக் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகள் பெற்று, 2-வது இடத்தையும் பிடித்தன. இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 2 போட்டி நடக்கிறது.

இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதிச்சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-1), வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டமும் சென்னையில் நடைபெறுகிறது. 2-வது தகுதிச்சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-2), இறுதிப்போட்டியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

இந்நிலையில், சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

தோற்கும் அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். குவாலிபையர்-2 ஆட்டம் 26-ம் தேதியும், இறுதிப்போட்டி 28-ம் தேதியும் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.