பிரிட்டனின் அபராதம் ..ஆறு பேருதாங்கோ..

பிரிட்டிஷ் பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா பிரிட்டனில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே இருந்தது. கடந்த சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்ததால்  அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. செப்.,14 முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் என தெரிகிறது.

புதிய விதிமுறையின்படி  நண்பர்கள் அல்லது குடும்ப சந்திப்புகளில் இந்த எண்ணிக்கையை மீறினால் முதலில் இந்திய மதிப்பில் 9,500 ரூபாயும் அடுத்தடுத்து மீறினால் ரூ 3 லட்சத்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிகள் வேலையிடங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு  விலக்கு அளிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.