யாழ்ப்பாணத்தில் ஓட்டோக்களுக்கு மீற்றர் பூட்டினால்தான் அனுமதி! – ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓட்டோக்களுக்கு கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு ஓட்டோ தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டண மீற்றர் பொருத்துவதற்கான கட்டணத்தைக் கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து ஓட்டோ உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.