70 இலட்சம் மோசடி செய்த மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல்…

70 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு கொம்பனிவீதி பிரதேசத்தில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி நபரொருவரிடமிருந்து 70 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக மஹிந்த கஹந்தகம மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்தக் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கஹந்தகமவை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை வரும் 22ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.