தந்தைக்கு கிடைத்த 69 லட்சத்தை பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு – நாமல்

தனது தந்தைக்காக வழங்கிய 69 இலட்சம் மக்களுக்கான ஆணையைப் பாதுகாக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே அதற்கு ஆதரவாக நிற்பேன் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் தவறில்லை எனவும், அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் அமைச்சர் பதவியை ஏற்க விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அதே தினமே இவ்வாறு தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.