மன்னார், புதுக்குடியிருப்பில் போலீசார் மீது தாக்குதல் : தாக்கியோருக்கு வலை விரிப்பு

மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தந்தை மற்றும் மகன் இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் குழுவைச் சேர்ந்த ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உயில்ங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் பொலிஸ் குழுவினரை நோக்கி தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் , மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்துள்ளதாக மன்னாரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்திய தந்தை மற்றும் மகன் உள்ளிட்டவர்களை கைது செய்ய பொலிஸார் விரிவான தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.