பிக்பாஸ் பிரபலம் விக்ரம் மீது பெண் வழக்கறிஞர் புகார்.. காதலித்து ஏமாற்றியதாக் குற்றச்சாட்டு.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்றவர் விக்ரம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் தொலைக்காட்சி விவாதத்திலும் பங்கேற்பார். இந்த நிலையில் விக்ரம் மீது பெண் வழக்கறிஞர் கிருபா என்பவர் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பிக் பாஸ் தொலைக்காட்சியில் சமூக நீதி,தலித் அரசியல் அனைவரும் சமம் என்று பேசிய விக்ரம் தனிப்பட்ட முறையில் ஜாதியை உயர்த்தி ப் பேசும் நபராகவும் ஜாதி ரீதியாக மற்றவர்களை காயப்படுத்தும் நபராகவும் இருந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் விக்ரம் தம்மை காதலிப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் தன்னிடம் வாங்கி தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் கிருபா குற்றச்சாட்டியுள்ளார். தாம் இருக்கும் கட்சியின் தலைவரையே விக்ரம் திட்டி இருப்பதாகவும் தம்மிடம் பலமுறை தவறாக பேசி மனதை காயப்படுத்தி இருப்பதாகவும் கிருபா புகார் அளித்திருக்கிறார்.

மேலும் விக்ரம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகார் அளித்திருப்பதாகவும் ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் வழக்கறிஞர் கிருபாவின் குற்றச்சாட்டை விக்ரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமது அரசியல் வளர்ச்சியையும் தொழில் முறை வளர்ச்சியும் சகித்துக் கொள்ள முடியாத சிலர் செய்யும் சதி தான் இது என்று கூறியுள்ளார்.

தாம் கிருபாவிடம் வாங்கிய பணத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து திருப்பி கடனை அடைத்து விட்டதாகவும் கிருபாவை காதலிக்கவே இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிருபா தான் தாம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய் புகார்களை கூறி இருப்பதாகவும் சட்டப்படி இதனை தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே பத்திரிக்கையாளர் ஐயப்பன் இது போன்று பெண்கள் விஷயத்தில் சிக்கிய நிலையில் தற்போது பிக் பாஸ் விக்ரமும் இது போன்ற பிரச்சனையில் மாட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.