நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 8 பேர் உடல் கருகி பலி.

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், ” நேற்று முன்தினம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் சாலையை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

இதைதொடர்ந்து, டேங்கரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது. நபர்களில் ஒருவர் செல்போன் வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர். பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.