வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே.. ஸ்டூவர்ட் பிராடுக்காக கண்ணீர் விட்டு அழுத ஆண்டர்சன்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் குறித்து ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் பேசிய ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர்.

அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார். இதை பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.