முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (31) மாலை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனப் பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.