3நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். இன்று காலை விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் சென்றனர்.

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநரின் இந்த டெல்லிப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.