15 வயது சிறுமி 10 பேரால் 02 வருடங்களாக பலாத்காரம்… 09 பேர் குடும்ப உறுப்பினர்கள்!

இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளான 15 வயது மாணவியொருவர் பாதிப்புக்குள்ளானது தொடர்பில் கண்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமியை , 13 வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகி வந்துள்ளனர் என அவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது அத்தைகளில் ஒருவர் இந்த பாவச் செயலுக்கு தலைமைதாங்கி செயல்பட்டு வந்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.