ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி! – ‘சனல் 4’ தொடர்பில் மொட்டு எம்.பி. கருத்து.

“ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே சனல் – 4 தொலைக்காட்சியால் போலியான வீடியோ வெளியிடப்பட்டு வருகின்றது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போர் தொடர்பிலும் போலியான வீடியோக்களை சனல் – 4 வெளியிட்டது. தற்போதும் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.