யாழில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மயிலங்காடு – ஏழாலை பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் துரைராசாவே (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்றுமுன்தினம் (23) வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்நிலையில், அவரைத் தேடிச் சென்றபோது, நேற்று (24) காலை தோட்டக் கிணற்றினுள் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.