மின்சாரம் தாக்கி வயோதிபர் சாவு! – முல்லைத்தீவில் சோகம்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 69 வயதுடைய வயோதிபரே சாவடைந்துள்ளார்.

வீட்டுடன் காணப்படும் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நீர் பம்பிக்கு மின்சாரம் இணைப்பை வழங்கும்போதே அந்த வயோதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.