இந்தியா, நியூசிலாந்து இடையில் அரையிறுதிப் போட்டி.

உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்தியா என்னதான் தொடர்ந்து 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்றாலும், கடந்த காலங்களில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக நாக்அவுட் சுற்றுகளில் பெற்ற தோல்விகள்தான் ரசிகர்களை அச்சப்பட வைத்துள்ளது.

2019-ல் அரையிறுதியிலும், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியிருக்கிறது. இதனால், இந்திய அணிக்கு நியூசிலாந்து நிச்சயம் சவால் அளிக்கும் வகையில் விளையாடும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், இந்த வீரர் அதிரடி காட்டினால் நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்கும் எனக் கூறியிருக்கிறார். அதில், ”அரையிறுதியில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுதரக் கூடிய வீரர் என்றால் அது ரோஹித் ஷர்மாதான். நிச்சயம், நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் விக்கெட்தான் பெரிய விக்கெட்டாக இருக்கும். ரோஹித் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சயம் இந்தியா வெற்றியைப் பெறும்” எனக் கூறினார்.

இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீப காலமாக தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். ஓபனராக அவரது ஸ்ட்ரைக் ரேட், இந்த உலகக் கோப்பை 2023 தொடரில் 121 வைத்திருக்கிறார். 9 லீக் ஆட்டங்களில் 503 ரன்களை குவித்து பிரமிக்க வைத்திருக்கிறார். அரை சதம், சதம் அடிக்கும்போது நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்காமல், தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.