பருத்தித்துறையில் வாள்வெட்டு! – இளைஞர் ஒருவர் படுகாயம்.

பருத்தித்துறையில்(25) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.