வடக்கு ரயில்வேயின் ஒரு பகுதி 06 மாதங்களுக்கு மூடப்படும்!

மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு புகையிரதப் பகுதி ஜனவரி 7ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மஹவ மற்றும் ஓமந்தே வரையிலான புகையிரத நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு வீதி மூடப்படவுள்ளது.

அதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்குப் பாதையில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.