இரண்டு வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்து சர்வதேசப் போட்டியில் சாதித்த யாழ். மைந்தன்.

மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துக்கொண்டார்.

இவர் யாழ்., தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவராவர்.

தேசிய நிலைப் போட்டிகளில் தனது சாதனையை நிலைநாட்டி வந்த புசாந்தன், தேசிய பளுதூக்கல் அணியில் இடம்பெற்று சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றார்.

அவருக்குப் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.