காரைநகரில் கைதான இந்திய மீனவர்கள் மீதும் கடற்படையினர் வெறியாட்டம்! – இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களில் இருவர் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்புக்குள் (17) மாலை எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் (18) காலை கையளிக்கப்பட்டனர். ஏனைய இருவரும் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

கடற்படையினர் இரும்புக் கம்பியால் தங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று காயமடைந்த இரு மீனவர்களும் தெரிவித்தனர்.

கைதான இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் மீதும் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.