காய்ச்சலால் மற்றுமொரு சிறைக் கைதி உயிரிழப்பு.

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார் என்று சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.