உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டமும் கடையடைப்பும்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது.

உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக் கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளைப் பூட்டி கடையடைப்புக்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து அழைப்பு விடுத்திருந்தன.

போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்துக்குப் பேரணியாகச் சென்று ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது. அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.