டலஸுக்கு நாமல் மீண்டும் அழைப்பு.

“நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு மீண்டும் முயற்சிப்போம்” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம் என நம்புகின்றேன். இது எனது கருத்தே தவிர கட்சியின் கருத்து அல்ல. 2005 இல் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற டலஸ் அழகப்பெரும பெரும் பாடுபட்டார். அவர் எம்மைப் போல் இடதுசாரி பொருளாதார சிந்தனை கொண்டவர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.