நாட்டின் நலனுக்காக வாட் வரியை உடனடியாக செலுத்துங்கள்.

பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய அனைவரும் அந்த கொடுப்பனவுகளை முறையாக செலுத்தினால், செலுத்தப்படும் பெறுமதி சேர் வரியின் சதவீதத்தை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெறுமதி சேர் வரி கொடுப்பனவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், வருமானம் அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக, பெறுமதி சேர் வரி சதவீதத்தை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.