9 வயது சிறுவன் கழுத்தில் பட்டி இறுகி பரிதாபச் சாவு!

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.

கலவான, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவனே நேற்று (14) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த மாணவன் கம்பியொன்றை, ரபர் பட்டியில் சுத்தி – அதனைச் சுழற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது கம்பி தலைப் பகுதியில் பட்டுள்ளது. அதன்பின்னர் ‘ரபர் பட்டி’ கழுத்தில் இறுகி, மாணவன் சாவடைந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
……

Leave A Reply

Your email address will not be published.