நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

லக்னௌவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் 22 வயது மாணவி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி ஸ்ருதி வர்மா. சீதாபூரைச் சேர்ந்த இவர் தனது நண்பர் சுபம் ராயுடன் சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் உள்ள செலிபிரிட்டி டெடோஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு எண் 903இல் வசித்து வந்தார்.

நண்பர்கள் இணைந்து திங்கள்கிழமை இரவு விருந்து நடத்தியுள்ளனர். அப்போது பால்கனியில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஸ்ருதி நிலைதடுமாறி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.

இந்த சம்பவம் நடைபெறும்போது அவரது குடும்பத்தினர் ஸ்ருதியின் நண்பரின் வீட்டில் இருந்துள்ளனர். இதையடுத்து ஸ்ருதியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் ஸ்ருதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லக்னௌவில் தங்கி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஸ்ருதி தயாராகி வந்தார். செவ்வாய்க்கிழமையன்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகள்
வாக்கெடுப்புக்குப் பின் ஆன்லைன் மசோதா மீதான விவாதம் இன்று தொடங்கியது

சு.க. தலைமையில் புதிய கூட்டமைப்பு – மைத்திரி முக்கிய கலந்துரையாடல்.

விவசாயம், சுற்றுலாத் துறைக்காக காணிகள் மீண்டும் விடுவிக்கப்படும் – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

முதலாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு…

பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…

பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

Leave A Reply

Your email address will not be published.