வாக்கெடுப்புக்குப் பின் ஆன்லைன் மசோதா மீதான விவாதம் இன்று தொடங்கியது

இன்று விவாத பொருளாக உள்ள ஆன்லைன் பாதுகாப்பு மசோதா (ஆன்லைன் பாதுகாப்பு மசோதா) மீது விவாதம் நடத்துவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு ஒன்றை நடத்த நாடாளுமன்றம் முடிவு செய்து, நடந்த வாக்கெடுப்பில், ஆன்லைன் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் , எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து , இன்று விவாதம் ஆரம்பமானது.

இன்று (ஜனவரி 23) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சட்டமூலம் மீதான விவாதத்திற்கு முன்னதாக, சபாநாயகர் சபையை தற்காலிகமாக இடைநிறுத்தி கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்தச் சட்டமூலத்திற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதன் பின்னணியில், இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.