விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், மருந்துக் கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் நிகழ்வு இடத்தில் பலியாகினர்.

விருதுநகர் அருகே வச்சா காரப்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டாசுக்கான மருந்து தயாரிப்பு அறையில், உராய்வுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த கன்னி சேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் காளிராஜ் (20), முதலிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வீரக்குமார் (50) ஆகியோர் நிகழ்விடத்தில் பலியாகினர்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னி சேரி புதூரை சேர்ந்த சரவணகுமார் (25), இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த நான்கு அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மேலதிக செய்திகள்

வாக்கெடுப்புக்குப் பின் ஆன்லைன் மசோதா மீதான விவாதம் இன்று தொடங்கியது

சு.க. தலைமையில் புதிய கூட்டமைப்பு – மைத்திரி முக்கிய கலந்துரையாடல்.

விவசாயம், சுற்றுலாத் துறைக்காக காணிகள் மீண்டும் விடுவிக்கப்படும் – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

முதலாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு…

பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

Leave A Reply

Your email address will not be published.