கடும் காற்றினால் 14 குடும்பங்கள் பாதிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்றினால் 14 குடும்பங்கள் பாதிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(21) திங்கட்கிழமை மற்றும் இன்று (22ம்) செவ்வாய்க்கிழமை வீசிய கடும் காற்றினால் 14 குடும்பங்களை சேர்ந்த 46 போ் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 08, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 02, வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 02, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 01, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 01 வீடுகளுமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவா்களுக்கான அனர்த்தம் தொடர்பான மதிப்பீடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு நட்ட ஈட்டு கொடுப்பனவினை துரிதமாக பெற்றுக்கொள்ள மாவட்ட செயலாளர் ஊடாக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.