ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்.

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மத்திய பஸ் நிலையம் வரை சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.