ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – 3 வீரர்கள் பலி.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜோர்டானில் உள்ள சிரிய எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க தளம் ஒன்று ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதாகவும், மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளால் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். பொறுப்பானவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜோ பிடன் குறிப்பிட்டார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் அமெரிக்கப் படைகள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை.

Leave A Reply

Your email address will not be published.