ஐசிசி கிரிக்கெட் தடை நீக்கப்பட்டது.

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றுள்ளது.

ஐசிசியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்தது.

Leave A Reply

Your email address will not be published.