யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிவில் உடை பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்

இன்று (05) காலை வீதியால் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவனை மறிக்கும் போது நிற்கவில்லை என , மாணவனை துரத்திச் சென்று மறித்த வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் சிலரை சிவில் உடையில் அழைத்துவந்து மாணவன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மாணவன் தன்னை தாக்கியதை கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த போது , அவரத தொலைபேசியியையும் பொலிஸார் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளான்.

அண்மைக் காலமாக பொலிஸார் சிவில் உடையில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது அதிகரித்துவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.