காஷ்மீர் போல மாறிய ஹரியாணா சூழல்: விவசாயிகள்

காஷ்மீர் போல பதற்றம் நிறைந்ததாக ஹரியாணாவின் சூழல் மாறியுள்ளதாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், தில்லிக்குள் எங்களை நுழையவிடக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது தெளிவாகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தவாவது அனுமதி தர வேண்டும்.

அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காததால், இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தில்லிக்குள் நுழையும் போராட்டத்தில் எங்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படுகின்றன. எங்கள் டிராக்டர்களின் டயர்கள் கிழிக்கப்படுகின்றன.

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என ஹரியாணா டிஜிபி தெரிவித்துள்ளார். அதனால், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரியாணாவின் சூழல் காஷ்மீர் போல பதற்றமானதாக மாறியுள்ளது. தில்லி நோக்கி பிப். 21ஆம் தேதி பேரணி நடத்துவோம். எங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அரசே பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

மேலதிக செய்திகள்

காஸா நாசர் மருத்துவமனைக்குள் புகுந்த இஸ்ரேலியப் படைகள்.

இந்திய பெரிய வெங்காயம் மீண்டும் இலங்கைக்கு……….

இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பிரிட்டிஷ் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.

இஸ்ரேலுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததற்கு ஈரான் கண்டனம்.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அதிரடி அறிவிப்புகள்

விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அரசியல் நகர்வுகள்.. புதிய பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம்!

Leave A Reply

Your email address will not be published.