நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள் – அண்ணாமலை தகவல்!

தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, “பாஜகவில் இருக்கக்கூடிய கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும்.

தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், இணைவதும், இணையாமல் செல்வதும் அந்தந்த கட்சியின் விருப்பம். 2024 தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் 3 மற்றும் 4-ம் இடத்திற்கு சென்றுவிடும்.

தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் ஓரிரு நாட்களில் பாஜகவில் இணைய உள்ளார்கள். எனவே, அனைவரையும் நாங்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

தேஷபந்து தென்னகோனின் பதவிக்காலம் முடிய 10 நாட்கள் : டிரான் மற்றும் தேஷபந்துவுக்கு கொலை மிரட்டல்!

பாகிஸ்தான் தேர்தல் , களவாடப்படும் வெற்றி! (Video)

Leave A Reply

Your email address will not be published.