நெதர்லாந்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

நெதர்லாந்தின் கெல்டர்லேண்ட் மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பாலம் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேனில் சிக்கிய மற்றுமொருவரை காப்பாற்ற நெதர்லாந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.