திடீரெனப் பற்றி எரிந்தது வீடு வயோதிபப் பெண் உடல் கருகிச் சாவு!

புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உடல் கருகிப் பலியாகியுள்ளார்.

கிரிவல்கெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை ஓலையால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீடு நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

வீடு தீப்பற்றிய போது அவரது 70 வயதான கணவர் வெளியேறி உயிரைக் காப்பாற்றியுள்ளார். எனினும், தீக்காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

Leave A Reply

Your email address will not be published.